ஐங்குறுநூறு - 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து.
ADVERTISEMENTS
மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய வாகுக தில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.
371
ADVERTISEMENTS
என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு
அழுங்கல் மூதூர் அலரெழச்
செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே.
372
ADVERTISEMENTS
நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக
புலிக்கோட் பிழைட்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
வம்பமை வல்வில்விடலை தாயே.
373
பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ
மிளி முன்பின் காளை காப்ப
முடியகம் புகாக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே.
374
இதுவென் பாவை பாவை இதுஎன்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின ளோஎன் பூங்க ணோளே.
375
நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று
காடுபடு தீயின் கனலியர் மாதோ
நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறனில் பாலே.
376
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.
377
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன் தேமொழித்
துணையிலள் கலிழும் நெஞ்சின்
இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே.
378
தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்
இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை
இனக்களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே.
379
அத்தம் நீளிடை அவனொடு போகிய
முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே.
380