ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

ஐங்குறுநூறு - 48. பாணன் பத்து

ADVERTISEMENTS

எவ்வளை நெகிழ மேனி வாடப்
பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்
துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்
அதுமற்று உண்ர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என்அவர் தகவே.
471
ADVERTISEMENTS

கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்துநின் றதுவே
எம்மின் உணரா ராயினும் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே.
472
ADVERTISEMENTS

பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்
செலவுநீ நய்னதனை யாயின் மன்ற
இன்னா அரும்படர் எம்வயின் செய்த
பொய்வ லாளர் போலக்
கைவல் பாணஎம் மறாவா தீமே.
473

மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு
கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே.
474

நொடிநிலை கலங்க வாடிய தோளும்
வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்
பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்
எம்வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேரன் பினனே.
475

கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப
பருவம் செய்தன பைங்கொடி முல்லை
பல்லான் கோவலர் படலைக் கூட்டும்
அன்புஇல் மாலையும் உடைத்தோ
வன்புறை பாண அவர்சென்ற நாடே.
476

பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயின்
காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே.
477

நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து
யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்
சொல்லியது உரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே.
478

சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய
நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும்
அரும்பனி கலந்த அருளில் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்
பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே.
479

நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு
நீயும் குருசிலை யல்லை மாதோ
நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி
ஈரிதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டு மருளா தோயே.
480